செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக விஷ சாராயம் பருகியதால் 50 க்கும் மேலானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்ப நலன் கருதி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் இந்த விஷ சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்ட அமாவாசை என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கும் ரூ.50,000 நிவாரணம் வழங்கியதாக தகவல் வெளியாகியது. இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்ததால் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது குற்றவாளியான அமாவாசைக்கு ரூ.50,000க்கான காசோலையை ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்து தகுந்த தண்டனை வழங்குவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.