தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த தடை – அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

1
Exams
Exams

தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கல்லூரித் தேர்வுகள்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் செப்டம்பர் மாத இறுதிக்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதனை மீறி தேர்வுகளை தடை செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை யுஜிசி.,க்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுகளை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள இச்சமயத்தில் நடத்த மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

8 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்திலும் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு மாணவர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இது குறித்த வழக்கும் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த யுஜிசி வழங்கிய உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்த அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாணவர் அலிகான் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here