விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு உண்டு – கனடா பிரதமர் மீண்டும் சர்ச்சை கருத்து!!

0

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 8 வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தற்போது மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்:

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனை எதிர்த்து அரியானா, பஞ்சாப் உட்பட 6 மாநில விவசாயிகள் டெல்லியில் “டெல்லி சலோ” என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சு வார்த்தையினை 3 முறை நடத்தியது. ஆனால், 3 முறையும் பேச்சு வார்த்தை தோல்வியினை சந்தித்துள்ளது. இப்படியான நிலையில், வரும் 8 ஆம் தேதி “பாரத் பந்த்” என்ற நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போராட்டம் ஆரம்பித்த போது பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வந்தனர். அப்போது கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் கனடா அரசு துணை நிற்கும் என்று ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும்!!

அவர் கூறியிருப்பதாவது, “கனடா அரசு எப்போதும் அமைதியான போராட்டங்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் எழுந்து நிற்கும். பேச்சுவார்த்தை நோக்கிய நகர்வுகளை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இவரது முந்தைய கருத்திற்கு இந்தியாவின் உள்துறை அமைச்சகம் அவர் தேவையில்லாமல் இந்தியாவின் உள்துறை விவகாரங்களில் மூக்கை நுழைகிறார் என்று கூறிருந்தது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here