3வது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் – அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

0

கனடா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள அனிதா ஆனந்த், கொரோனா தடுப்பு ஊசியின் மூன்றாவது டோஸ் எடுத்துக்கொண்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சரின் முக்கிய பதிவு :

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு எதிராக, தற்போது தடுப்பூசி செலுத்துதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டில் இதுவரை 31.4 மில்லியன் மக்கள் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். இதே மாதிரி,29.4 மில்லியன் மக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். மேலும் 7,318,232 மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கனடா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக உள்ள அனிதா ஆனந்த் மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போடாத மக்கள் விரைந்து போட்டு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தடுப்பூசி செலுத்தும் சேவையை செய்து வரும் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here