இன்னும் எத்தன…மூளையை தாக்கும் மர்ம நோய்…6 பேர் பலி!!!

0

உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவுவதை தொடர்ந்து கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயால் 6 பேர் பலியாகியுள்ளதாக வெளியான செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று கடந்த வருட இறுதியில் கணிசமாக குறையத் தொடங்கியது. கட்டுக்குள் வந்து விட்டது என நினைக்கையில், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிக அளவில் பரவத் தொடங்கியது. சென்ற மாதம் முழுக்க நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

 

தற்போது இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து  வருகிறது. இந்நிலையில் கனடாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய நோய் மேலும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் மர்மமான மூளை பாதிப்பு நோயால் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.பார்வை குறைபாடு, நினைவு திறன் குறைதல், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது.

இந்த நோய்க்கான காரணங்களை அறியமுடியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைவதால் மக்கள் பெருமூச்சு விடும் வேளையில் புதிதாக இப்படி ஒரு நோய் பரவுவது பொதுமக்களை பீதியில் உறையச்செய்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here