உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வெகுவிமரிசையாக நவம்பர் 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்துள்ளனர். இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஜோர்டான், ஏமன் போன்ற நாடுகளில் ஒட்டக காய்ச்சல் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதைத்தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஒட்டக காய்ச்சலின் அறிகுறிகள் தென்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கால்பந்து போட்டியை காண வந்துள்ள 12 லட்ச மக்களும், கத்தாரில் வசிக்கும் 28 லட்ச மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
உலக கோப்பையில் வெளியேறிய கத்தார், ஈக்வடார்…, ரவுண்டு 16 க்கு முன்னேறிய நெதர்லாந்து, செனகல்!!
மேலும் ஒட்டகங்களின் இருந்து பரவும் இந்த தொற்று முதன்முதலில் 2021ல் மனிதர்களுக்குப் பரவ ஆரம்பித்தது. காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் இந்த காய்ச்சலுக்கு மெர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 2600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு, 935 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.