கொரோனா நோய் தொற்று காரணமாக பெரும்பாலான குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்து தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு சி.ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்கான கட்டணத்தை ரத்து செய்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டு மக்களை மிகவும் கடுமையாக பாதித்து உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை, அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், தங்களின் குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியாமலும் உள்ளனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக பல குழந்தைகள் தங்களின் தாய் தந்தையை இழந்து நிர்கதியாக உள்ளனர். தங்களின் எதிர்காலத்தை பற்றி விழிபிதுங்கி உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசும் அக்குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளையும், நலத் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அலுவலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்கான கட்டணம் இல்லை என அறிவித்து உள்ளது. நாளை முதல் இந்த பயிற்சி வகுப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகி மாணவர்களை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!