பும்ராவிற்கு அப்படி என்ன தான் ஆச்சு.., T20 போட்டியில் இவர் செய்த மோசமான காரியம்.., அதிருப்தியில் ரசிகர்கள்!!

0
பும்ராவிற்கு அப்படி என்ன தான் ஆச்சு.., T20 போட்டியில் இவர் செய்த மோசமான காரியம்.., அதிருப்தியில் ரசிகர்கள்!!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் பும்ரா முதல் முறையாக பவுலிங்கில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளது உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது பந்து வீச்சின் மூலம் பல சாதனைகள் புரிந்துள்ளார். ஆனால் இவர் ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக பங்கேற்க முடியவில்லை. இதனால் நீண்ட நாள் ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். பும்ராவின் பந்து வீச்சு என்றாலே, அவர் ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட் எடுக்கும் வித்தை தான் அனைவருக்கும் நினைவில் வரும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 50 ரன்களை வாரி வழங்கினார். இவரது இந்த மோசமான பந்து வீச்சு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்ததே அவரது மோசமான பந்து வீச்சாக இருந்தது.

‘சர்ச்சையை சரி செய்ய தான் பொய் சொல்றாங்க’ – இந்திய வீராங்கனை மீது இங்கிலாந்து கேப்டன் குற்றசாட்டு!!

அதன் பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் இது போன்ற பந்து வீச்சை நிகழ்த்தியுள்ளதால் இது மோசமான சாதனையாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக T20 போட்டியில் விளையாட உள்ளனர். பும்ராவின் மோசமான பந்து வீச்சை பார்த்து தென்னாப்பிரிக்க போஸ்ட்மேன்கள் குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here