நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், மாத சம்பளம் பெறுவோருக்கு பல சலுகைகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு :
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2023-24 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மாத சம்பளம் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது,இவர்களுக்கான வருமான வரி விலக்கை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அது மட்டும் இல்லாமல், இவர்கள் தங்கள் ஊதியத்தை சில பங்குகளில் முதலீடு செய்யும் போது, இவர்களுக்கான வருமான வரி விலக்கை ரூ. 2 லட்சமாக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
அதேபோல் work from home ஊழியர்களுக்கு Allowance தொகை வழங்கப்படும் என்றும், இவர்களுக்கு வைஃபை உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதே போல் வீட்டு கடனுக்கான வருமான வரி விலக்கு, நிலம் மற்றும் வாகனம் வாங்குவதற்கான சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.