தங்க விலையில் விற்கும் தக்காளி இல்லாமல் பிரியாணி – செஞ்சு அசத்துங்க!!

0

பிரியாணி என்றால் நம் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் அசைவ பிரியர்களுக்கு சொல்லவே வேண்டாம். இவ்வாறு இருக்க பிரியாணியின் சுவையை அதிகப்படுத்துவதே தக்காளி தான். ஆனால் தற்போது உள்ள சூழலில் தக்காளி விலை தங்கம் விலை போல அதிகரித்து வருகிறது. எனவே இந்த பதிவில் நாம் தக்காளி சேர்க்காத சுவையான சிக்கன் பிரியாணி எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி – 2 டம்ளர்

கொத்தமல்லி – தே.அளவு

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

பால் – 1/2 கப்

அன்னாசி பூ – 2

ஏலக்காய் – 4

பட்டை – 2

கிராம்பு – 5

உப்பு – தே. அளவு

எண்ணெய் – தே. அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசி பூ, மிளகாய் பொடி, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் அதில் தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போடவும்.

இப்பொழுது பச்சை மிளகாய்யை மற்றும் பால் சேர்த்து 25 நிமிடங்கள் வேகவிடவும். இப்பொழுது 3 டம்ளர்  தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின்னர் வெட்டி வைத்த கொத்த மல்லி தழைகளை சேர்த்துக்கொள்ளவும்.

இப்பொழுது 1/2 மணி நேரம் சுடுதண்ணியில் ஊறவைத்த அரிசியை அடுப்பை சிம்மில் வைத்து குக்கரில் சேர்த்து 1 விசில் வரவும் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான தக்காளி சேர்க்காத சிக்கன் பிரியாணி ரெடி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here