கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஒப்புதல் அளித்த முதல் நாடு!!

0

உலகம் முழுவதும் கொரோனா கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவியது. அதற்கான தடுப்பூசியை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வருகிறது. இந்நிலையில் முதன் முதலில் ஃபைசர் – பயோன்டெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு செலுத்தலாம் என்ற ஒப்புதலையும் பிரிட்டன் அரசிடம் இருந்து பெற்று சாதனை படைத்துள்ளது.

ஃபைசர் – பயோன்டெக் நிறுவனம்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவியது. தற்போது சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியுள்ளது. இந்த கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒரே வழி தடுப்பூசியை கண்டுபிடிப்பது. அதற்கு ஒவ்வொரு நாடும் தீவிரமாக தடுப்பூசியை கண்டுபிடித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தோல்வியை தழுவியது. தற்போது கொரோனாவிற்கான சரியான தடுப்பூசியை ஃபைசர் – பயோன்டெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனம் சோதனை செய்யப்பட்ட அனைத்து ஆய்விலும் வெற்றி பெற்றதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் அரசு ஒப்புதல்:

ஃபைசர் – பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 3 ஆம் கட்ட ஆய்விலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான சரியான மருந்தை ஃபைசர் -பயோன்டெக் நிறுவனம் முதன் முதலில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்ததும் அல்லாமல், எந்தவித பயமின்றி மக்களுக்கு போடலாம் என்றும் அனுமதி வழங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here