
பொதுவாக வெயிலின் காரணத்தால் நம்முடைய முகம் சில சரும பிரச்சனையை சந்திக்க கூடும். இதனால் காசு கொடுத்து கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை வாங்கி நம் முகத்தில் அப்ளை செய்து வருகிறோம். இப்படி பட்ட கெமிக்கல்களால் நம் முகத்திற்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இயற்கையான சில மூலிகை பொருட்களை வைத்து நம் சருமத்தை பாதுகாக்க, சூப்பரான பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தேவையான பொருட்கள்;
- ரோஜா இதழ் பொடி – 2 டீஸ்பூன்
- பால் – 2 டீஸ்பூன்
- அதிமதுரம் பொடி – 1 டீஸ்பூன்
- தேன் – 2 டீஸ்பூன்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
செய்முறை விளக்கம்;
இந்த பேஸ் பேக் தயாரிப்பதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ரோஜா இதழ் பொடி மற்றும் அதிமதுர பொடியை வாங்கி கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 2 டீஸ்பூன் ரோஜா இதழ் பொடி, அதிமதுர பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். மேலும் அதில் 2 டீஸ்பூன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
நம் முகத்தை கழுவி சுத்தமான துணி வைத்து துடைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து மாதத்தில் மூன்று முறையாவது பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகம் அழகாக மாறுவதற்கும், பருக்கள் வருவதில் இருந்து நமக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.
தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கம்.,உடனே புக் பண்ணுங்க? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!