கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 15 பொருட்களுக்கும் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டிய விலையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கிருமி நாசினி, முகக்கவசம் சேர்ப்பு:
ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து அதிகரித்தது. கொரோனா தொற்று பரவுவதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு புது அரசாணையை வெளியிட்டுள்ளது, அதில் கிருமிநாசினி, முககவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழக அரசு அறிவித்து. அதற்கான விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.3, மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க்கின் அதிகபட்ச விலை ரூ.4.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கிருமிநாசினி 200 மில்லி லிட்டர் ரூ.110 என்றும், N95 முககவசம் ரூ.22 என்றும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!