கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு இடைக்கால தடை விதிப்பு!!

0

பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

தடுப்பூசி போடுவதற்கு இடைக்கால தடை:

பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றன. அதனால் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

 

இதனை தொடர்ந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு கடந்த 10 ஆம் தேதி உயிரிழந்தார். அதற்கு காரணம் அந்த பெண் செலுத்திக்கொண்ட தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவு என்று கூறப்படுகிறது.

பிரேசிலில் வேறு எந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here