ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தி உள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க பார்டர் கவாஸ்கர் டிராபி கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டிராபியில், முதல் 3 போட்டிகளின் முடிவில், இந்திய அணி 2-1 என தொடரை வெல்ல முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து, 4 வது டெஸ்ட் போட்டி கடந்த 9ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களும், இந்திய அணி 571 ரன்களும் எடுத்திருந்தனர். இதில், 95 ரன்கள் ஆஸ்திரேலிய அணிகள் பின்தங்கி இருந்தது. இதையடுத்து, இன்று நடைபெற்ற 5ம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பு 175 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், 5 நாட்கள் மட்டுமே நீடிக்க கூடிய டெஸ்ட் போட்டியானது, தற்போது டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
IND vs AUS ODI: ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதில் சிக்கல்?? இவரது இடத்திற்கு போட்டி போடும் 3 வீரர்கள்!!
இதனால், 4 டெஸ்டில், இந்திய அணி 2ல் வெற்றி, 1ல் டிரா மற்றும் 1ல் தோல்வி அடைந்து, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. மேலும், தொடர்ந்து 4வது முறையாக இதே வடிவில் பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி கைப்பற்றி அசத்தி உள்ளது. மேலும், இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி உள்ளது.