IND vs AUS test: “இந்த 2 வீரர்களை சமாளிச்சுட்டா போதும் இந்தியா வென்று விடும்”…, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

0
IND vs AUS test:
IND vs AUS test: "இந்த 2 வீரர்களை சமாளிச்சுட்டா போதும் இந்தியா வென்று விடும்"..., ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி வீரர்களை முக்கியமாக சமாளிக்க கூடிய இரண்டு வீரர்களை குறித்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இயன் சேப்பல்:

இந்திய அணியானது நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது மற்றும் கடைசி டி20 போட்டியை விளையாட இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணியானது, 9ம் தேதி முதல் பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டிராபியில் இந்திய அணி 3ல் வெற்றி பெற்றால் தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இதனால், இந்த டிராபி இந்திய அணியை பொறுத்த வரையில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயன் சேப்பல், இந்திய அணிக்கு சவால் விட கூடிய இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை குறித்து ஆலோசனை வழங்கி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB…, பிரபல கால்பந்து அணிகளுடன் இணைந்து அசத்தல்!!

அவர் கூறியதாவது, ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நாதன் லியோனின் பந்து வீச்சில் கவனமாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தற்போது டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார். இவரையும், நாதன் லியோனையும் சமாளித்து விட்டால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் என்று இயன் சேப்பல் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here