பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இனி வரும் காலங்களில் கட்டாயம் பரிந்துரைக்கப்படும் என்று தேசிய வைராலஜி நிறுவன இயக்குனர் பிரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன. தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முறை பின்பற்றப்பட வேண்டுமா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்தியாவில் தற்போது வரை 56.06 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய வைராலஜி நிறுவனத்தின் இயக்குனர் பிரியா ஆப்ரஹாம், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் குறைந்த பட்சம் 7 உலக நாடுகளாவது இந்த பூஸ்டர் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி சோதனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய அரசும் இந்திய மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்