உ.பி. முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்.. 3 நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்!

0

சில நாட்களுக்கு முன் உத்தர பிரதேச காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையின் எண்ணுக்கு இன்னும் 3 நாட்களில் அம்மாநில முதல் மந்திரிக்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை வந்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்:

உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த முறையும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. மேலும் அம்மாநிலத்தில் இது இரண்டாவது முறை பா.ஜ.க. ஆட்சியை பிடிப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இரண்டாவது முறையாக முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் மீண்டும் பொறுப்பேற்று உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதல் மந்திரி ஆதித்யநாத்க்கு சில கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் முதல் மந்திரியை பாதுகாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 2ம் தேதி காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையின் எண்ணுக்கு ஒரு மர்ம நபர் போன் செய்துள்ளார். அதில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது இன்னும் 3 நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தொடர்ந்து மர்ம நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர். மேலும் சுஷாந்த் கோல்ப் சிட்டி காவல் நிலையத்தில் இது குறித்த வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்க்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here