தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். தற்போது பல ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் அவரின் வீட்டை சோதனை செய்து வருகின்றனர்.
விக்ரம்
‘என் காதல் கண்மணி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் விக்ரம். அதன் பிறகு அவர் நடித்த சேது படமே அவருக்கு புகழை தேடி தந்தது. அப்படத்தின் மூலமே அவருக்கு சியான் விக்ரம் என்ற பெயரே வந்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து முன்னனி நடிகராக ஆனார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து பல ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார் விக்ரம். அண்மையில் தான் அவரது மகளுக்கு திருமணம் நடைபெற்றது. விக்ரமின் மகனும் தற்போது திரையுலகில் கால் பதித்துள்ளார். அவர் நடித்த ஆதித்யா வர்மா படம் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் துருவ் அவர்களுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள் என்றே சொல்லலாம்.
பாலாவிற்கு விக்ரமுக்கு இடையில் நடந்த சில கருத்து வேறுபாட்டால் ‘வர்மா’ படம் ஓடிடியில் வெளியானது. தற்போது கோப்ரா என்ற படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் பிசியாக உள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே அஜித் மற்றும் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தற்போது விக்ரம் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஒரு மர்ம நபர் போலீசுக்கு போன் செய்து விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி துண்டித்துள்ளார். இதனால் விக்ரம் வீட்டில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.