சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர் சீனிவாசன் அவர்களுடைய இந்தியா சிமெண்ட்ஸ் பேக்டரியில் தற்போது 2 பைப்வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IPL தொடரில் MS தோனி வழிநடத்தும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த அணிக்கு தமிழ் நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு வெற்றிகளை குவித்த அணி சி.எஸ்.கே. இந்த அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமாக நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரில் ஒரு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
தற்போது அந்த தொழிற்சாலையில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரை ஆலை நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பணிக்கு வந்த கொண்டிருக்கும் யாரோ சிலர் தொழிற்சாலையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தஇவ்வாறு செய்திருக்கலாம் என போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல் துறைக்கு ஆலையில் இருந்தவர்கள் அந்த வெடிகுண்டுகளை கண்டு தகவல் தெரிவித்தபின், சரியான நேரத்திற்கு போலீசார் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்த்த வெடிகுண்டு வைத்த சம்பவம் அங்குள்ள அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. தற்போது ஆலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்