“மக்களின் நாயகன்” சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று தற்போது தலைவர்கள், பிரமுகர்களிடையே மிக அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட்டிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

சோனு சூட்

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் பலர் தங்களது வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். அதுமட்டுமல்லாமல் பல மக்கள் பசியினால் கடும் அவதிபட்டு வந்தனர். இந்நிலையில் பாலிவுட் நடிகரான சோனு சூட் பொதுமுடக்கம் காலத்தில் பொருளாதாரம் இன்றி அவதிப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்தார். பணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கி பல தரப்பு மக்களின் வயிற்று பசி போக்குவதற்கு மிக்க உதவிகரமாக இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தன் மற்றும் தனது மனைவிக்கு சொந்தமான சொத்து பத்திரங்களை வங்கியில் அடமானம் வைத்து மக்களுக்காக உதவி செய்தார். இது பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவரது உதவியினால் பல தரப்பு மக்கள் மிக்க பயனடைந்தனர். இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் சோனு சூட்டிற்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!!

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார். அதன்படி அவர் கூறியதாவது, இன்று எனக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. எனவே நான் என்னை தனிமை படுத்தியுள்ளேன். முன்பை விட தற்போது என்னால் அதிகமான நேரங்களில் உங்களுக்கு உதவி செய்ய முடியும். எந்த சூழ்நிலையிலும் நான் உங்களுடன் இருப்பேன். எப்போதும் கொரோனா சூழலில் நான் உதவி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here