கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ப்பு !!!

0

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் நாட்டில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றை முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கவேண்டும் என வலியுத்தியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா முழுவதும் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயை ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்தது. அது கொரோனா பாதித்த நோயாளிகளை அதிகம் தாக்குகிறது என்பதுதான் தற்போதைய சூழலில் வருத்தமான விஷயம்.

பூஞ்சை தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாகக் கவனித்துவிட்டால் மருந்துகளில் காப்பாற்றிவிடலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் கருப்பு பூஞ்சை வேகமாக பரவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான ஆம்போடெரிசின் பி மருந்து இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த கருப்பு பூஞ்சை நோயை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்திட வேண்டும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பிட்டு திட்டத்தில் சேர்த்திடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here