கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது பாபிஜி அப்பளம் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க அமைச்சர் பொறுப்பற்ற பேச்சு.!
இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வால் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்துள்ள பாபிஜி பப்பட் என்னும் அப்பளம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து பாபிஜி அப்பளத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையிலான வீடியோவில் பேசிய அர்ஜுன் ராம் மேக்வால் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு உற்பத்தியாளர் பாபிஜி அப்பளம் என்ற பெயரில் அப்பள நிறுவனம் தொடங்கியுள்ளார். இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு வரை கொரோனா தடுப்பூசிகளை எதிர்பார்க்க வேண்டாம் – WHO..?
கொரோனா பரவலை தடுக்க அரசுகளும், விஞ்ஞானிகளும் கடுமையாகப் போராடி வரும் நிலையில் அவற்றை அலட்சியப்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் பா.ஜ.க அமைச்சர் பொறுப்பற்ற பேச்சு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.