தமிழகத்தில் இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கட்சி கூட்டணி செய்துள்ளது. தற்போது பாஜகவின் சி.டி.ரவி பேட்டி ஒன்றில் சுயமரியாதை உள்ளவர்கள் மட்டும் பாஜகவிற்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழகத்தில் களம் காண்கிறது. மேலும் அதிமுக கட்சி இந்த தேர்தலில் பாஜக கட்சிக்கு 20 தொகுதி மற்றும் 1 மக்களவை இடைத்தேர்தல் தொகுதியையும் வழங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பாஜக கட்சி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ சம்பத் தற்போது பாஜக கட்சியில் சி.டி.ரவி முன்னிலையில் இணைந்துள்ளார். இவர்களை தொடர்ந்து அமமுக கட்சியின் தர்பாரண்யேஸ்வரர் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து தற்போது பாஜகவின் சி.டி.ரவி பேட்டியளித்துள்ளார்.
#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்துக்கு 337 ரன்கள் இலக்கு!!
அவர் கூறியதாவது, பாஜக கட்சியில் சுயமரியாதை உள்ளவர்கள் அனைவரும் வந்து சேரலாம். மேலும் தற்போது தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் சுமுகமான சூழ்நிலை இருப்பதால் மீண்டும் இந்த கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் வெற்றிபெறுவதற்கு கடும் போட்டி இருப்பதால் முடிவு குறித்து அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.