இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கான காலக்கெடு 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “பிறப்பு சான்றிதழ்களின் அடிப்படையில் 18 வயது பூர்த்தியானவர்களை கண்டறிந்து புதிய வாக்காளர் அட்டையை வழங்க தேர்தல் ஆணையமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“அதேபோல் ஒருவரின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் மூலம் உறுதி செய்து உயிரிழந்தவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இத்திட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அமலுக்கு கொண்டு வரப்படும்.” என பேசி உள்ளார். இப்படி பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை வாக்காளர் அட்டையுடன் விரைந்து இணைக்கப்பட்டால் கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகள் அகற்றப்படும் என பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.