தக்காளி சாதம் அனைவர்க்கும் பிடித்தமான உணவு என்றே சொல்லலாம். ஏனெனில் இது பிரியாணி சுவைக்கு ஈடாக இருக்கும். பிரியாணிக்கும், தக்காளி சாதத்திற்கும் சிறு சிறு வித்தியாசங்கள் தான் இருக்கும். அதாவது சிக்கன் அல்லது மட்டனை சேர்த்தால் தான் பிரியாணி. இல்லையென்றால் தக்காளி சாதம் அல்லது குஸ்கா. இப்பொழுது பிரியாணி சுவையில் தக்காளி சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – 1/2 கி
வெங்காயம் – 1/4 கி
அரிசி – முக்கால் கிலோ
பட்டை
கிராம்பு
தேங்காய் பால் – 1 கப்
பச்சைமிளகாய் – 6
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி
புதினா
பிரியாணி இலை
செய்முறை
முதலில் அரிசியை கழுவி அதில் தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து கொள்ளவும். இப்பொழுது இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாயை அதில் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு வெங்காயத்தை அதில் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் அதில் ஒன்று இரண்டாக அரைத்த தக்காளியை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பின் ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த விழுதை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது தேங்காய் பாலை சேர்க்கவும். இப்பொழுது ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இந்த முக்கால் கிலோ அரிசியை கப்பில் அளந்து கொள்ளவும். இப்பொழுது தண்ணீரை ஊற்றி அது கொதி வந்ததும் அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். இப்பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்து 3 விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான தக்காளி சாதம் தயார்.