ஜூன் 23 முதல் அனைத்து அலுவலங்களிலும் 100% சதவீத பணியாளர்களுக்கு அனுமதி.. பீகார் அரசு உத்தரவு!!!

0

பீகார் மாநில முதலமைச்சர் இன்று அம்மாநிலத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். மேலும் அவர் ஜூன் 23 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை அனைத்து அலுவலகங்களும் 100% பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் வெவ்வேறு தளர்வுகளை அறிவித்த வண்ணம் உள்ளன. பீஹாரிலும் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து படிப்படியாக சில தளர்வுகள் மக்களின் தேவைகளுக்காக அளிக்கப்படுகிறது.

தற்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஜூன் 23 முதல் ஜூலை 6 வரையான காலகட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளார். அவர் அறிவிப்பின்படி, அரசு மற்றும் அரசு அல்லாத நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு கடைகள் 7 மணி வரையிலும், பூங்காக்கள் காலை 6 மணி முதல்  மதியம் 12 மணி வரையிலும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர்த்து அம்மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். இந்த உத்தரவு ஜூன் 23 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here