பிக் பாஸ் சீசன் 5 முடிவை நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மிரட்டும் ஓமைக்ரான்… பொது போக்குவரத்துக்கு வந்த புதிய சிக்கல் – நொந்து போன பயணிகள்!!
பிக் பாஸ் சீசன் 5:
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 95 நாட்களை கடந்து தற்போது முடிவை எட்ட உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பிக் பாஸ் சீசன் 5 யின் பைனல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் ஓட்டின் பேரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். கடந்த வாரம் சஞ்சீவ் குறைவான ஓட்டுக்களை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரம் சிபி தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் சிபி 12 லட்சம் அடங்கிய பிக் பாஸ் பரிசு தொகை பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
இன்னும் பிக் பாஸ் வீட்டில் தாமரை செல்வி, பாவனி, ராஜு, பிரியங்கா, நிரூப், அமீர் ஆகியோரே உள்ளனர். அமீர் நேரடியாக பைனலுக்கு தேர்வாகிவிட்டார். மீதமிருக்கும் 5பேரில் தான் ஒருவர் வெளியேறுவார். மக்களின் ஓட்டின் அடிப்படையில் தற்போது ராஜு தான் அதிகமான ஓட்டுக்களை பெற்றுள்ளார். பாவனி மற்றும் நிரூப் தான் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளனர். நிரூப் பாவனியை விட சில ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். இன்னும் ஓட்டுகள் நடந்து கொண்டு இருப்பதால் இருவரில் ஒருவர் தான் வெளியாக வாய்ப்புள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்