பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பலரும் எதிர்பார்த்தபடியே பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது போன வாரம் வெளியேறிய வேல்முருகன் கொடுத்த பேட்டி ஒன்றில் ரம்யா பாண்டியனை பச்சோந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
வேல் முருகன்
கொரோனா காலகட்டம் காரணமாக ஜூன் மாதத்தில் தொடங் க வேண்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் தொடங்கியுள்ளது. எப்படியோ வெற்றிகரமாக 30 நாட்களை கடந்து விட்டது. முதல் வாரத்தில் எந்த விக்ஷனும் நடக்கவில்லை. மேலும் அடுத்த அடுத்த வாரத்தில் ஆஜித் வெளியேறுவதாக இருந்தது.
ஆனால் விக்ஷன் பாஸ் இருந்ததால் அதிலிருந்து தப்பினார். போன வாரம் வேல்முருகன் வெளியேறினார். அதன் பிறகு தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்தது. தொடர்ந்து பாலாஜி மற்றும் சனம் இடையே பல பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது.
இந்த பிரச்சனை பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. மேலும் வனிதா பாலாஜியை செருப்பால அடிப்பேன் என்று வீடியோவில் கூறியிருந்தார். இந்நிலையில் பலரும் தற்போது ஆரி, ரம்யா பாண்டியன் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வேல் முருகன் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
அதில் பிக் பாஸ் வீட்டில் பச்சோந்தி யார் என்று கேட்டதற்கு ரம்யா பாண்டியன் தான் என்று கூறியுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு கமல் சார் முன்னாடி நல்ல பேர் வாங்க இவ்வாறு நடிப்பதாக கூறியுள்ளார். இதனால் ரம்யாவின் ரசிகர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.