‘ஒரு பொண்ணு தான் இன்னொரு பொண்ணுக்கு எதிரியே’ – பீட்டர் பால் பிரச்சனைக்கு பிறகு மற்றொரு பிரச்சனையில் சிக்கிய வனிதா!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு இவர் தான் காரணம் என்பதை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜய் குமார் ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியவர். அவரது மகன் ஸ்ரீ ஹரிகாக அந்த அளவிற்கு போராடி பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இவரது முழு சுயரூபமும் இந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. வத்திக்குச்சி வனிதா என்றே இவரை பலரும் அழைத்து வந்தனர். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் வாய்ப்பு கிடைத்து உள்ளே வந்தார். இது யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை கைப்பற்றினார். பிறகு தனியாக யூடுப் சேனல் ஒன்றை உருவாக்கினார். அதில் உதவியாக இருந்த பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டு அவரை விட்டு சில மாதங்களிலேயே பிரிந்தார்.

தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அதனையும் பொறுத்துக்கொண்டு வனிதா தற்போது அந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலத்தின் மூலம் ஏற்பட்ட பிரச்சனையால் இதிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவர் ரம்யா கிருஷ்ணானை தான் இப்படி குறிப்பிடுகிறாரோ என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here