பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியனும் அடங்குவர். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். தற்போது இருவரும் மிக நெருக்கமாக கட்டிப்பிடித்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷிவானி ஷேர் செய்துள்ளார்.
பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்நிகழ்ச்சியில் சீசன் 4 லிலும் காதல், கருத்து வேறுபாடு என்று விறுவிறுப்பு குறையாமலேயே இருந்தது. ஆனால் சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாமல் மக்களிடம் மிகுந்த கெட்ட பெயர் வாங்காமல் வெளிவந்த போட்டியாளர்களின் ரம்யா பாண்டியன், ஷிவானிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், சினிமாவில் நடிப்பார்கள் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்து அவர்களது கனவை கலைத்துவிட்டது. இருந்தாலும் இவர்கள் போட்டோ ஷூட் செய்து விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படித்தான் தற்போது இறுக்கி கட்டிப்பிடித்தபடி போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். பிக் பாஸ் முடிந்த பின்பும் நல்ல தோழிகளாக உள்ள இவர்களை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்:
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்