
விஜய் டிவியில் ஒளிபரபாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏகப்பட்ட கலவரத்துடன் விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. அதிலும் இன்றைய கோர்ட் டாஸ்க் காரசாரத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பேசிய பூர்ணிமா, சமையல் பற்றி எதுவும் தெரியாத அர்ச்சனா சாப்பாடு விஷயத்தில் எங்களை பழிவாங்கி விட்டார் என குற்றம் சொல்கிறார்.

அதற்கு விசித்ரா, அர்ச்சனாவுக்கு சமைக்க தெரியவில்லை என்பது பிரச்சனையா இல்லை , அவர் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா என கேட்கிறார். மேலும் நான் எதற்காக உங்களை பழிவாங்க வேண்டும் எனவும் கேட்கிறார். இதோடு பிக் பாஸ் வீட்டார் பழிவாங்கும் எண்ணத்தில் தான் அர்ச்சனாவை குறை கூறுகின்றனர் என கூறுகிறார். இப்படி அடுத்து விசித்ரா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் பூர்ணிமாவை அதிர்ச்சியடைய வைக்கிறது.