விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய டீஜே மகேஸ்வரி மற்றும் செரினாவை குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
தற்போதைய மக்களின் பேவரைட் லிஸ்டில் முதலில் இருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். உலகநாயகன் தொகுத்து வரும் இந்த ஷோ கிட்டத்தட்ட 55 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் வாரத்தின் இறுதி நாளில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அந்த மாதிரி பிக்பாஸ் வீட்டை விட்டு அடுத்தடுத்து வெளியேறி வந்தவர்கள் தான் செரீனா மற்றும் மகேஸ்வரி.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிக்பாஸ் வீட்டுக்குள் எந்த மாதிரி நண்பர்களாக இருந்தார்களோ அதே போல் வெளியே வந்ததில் இருந்து நண்பர்களாக இருக்கிறார்கள் . மேலும் இரண்டு பேரும் அவரது கேரியரை பார்க்க ஸ்டார்ட் செய்து விட்டார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த ஊ சொல்றியா ஊஊ சொல்றியா நிகழ்ச்சியில் மகேஸ்வரி , அசார் கோளாறு, சாந்தி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!
ஆனால் இந்த நிகழ்ச்சியில் செரீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது வீக்கெண்டில் மகேஸ்வரியும் செரீனாவும் இரவில் கிளப்புக்கு சென்றுள்ளார்கள். அங்கு எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.