ஆரியை மட்டுமே டார்கெட் செய்து வரும் அர்ச்சனா – கடுப்பான ‘பிக் பாஸ்’ ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கோழிமுட்டை டாஸ்கில் பல சண்டைகள் ஏற்பட்டதை அடுத்து தற்போது டாஸ்க்கும் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த வாரம் சுவாரசியம் கம்மியாக இருந்தவர்களை நாமினேட் செய்துள்ளனர்.

பிக் பாஸ்

கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகளால் பல சண்டைகள் ஏற்பட்டது. ஆரியம் வழக்கம் போல ஒரு விளையாட்டை விளையாடுவதற்குள் பல கோளாறுகளை சொல்லி கடுப்பாக்கினார். மேலும் வாராவாரம் சுவாரசியம் கம்மியாக இருந்ததற்கு ஆரியை தான் குறிப்பிட்டு சொல்லுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அர்ச்சனா சில நாட்களாக தனது சுயரூபத்தை காட்டியும் வருகிறார். நேற்று கூட சோம் உடன் ஒரு முட்டைக்காக சண்டையிட்டார். ரியோவுடனும் சண்டைகள் நடந்தது. அடுத்ததாக கன்பெசன் ரூமில் கூட கதறி அழுதார். ஆனால் மக்களுக்கு அவர் மீது எந்த அனுதாபமும் ஏற்படவில்லை. கிண்டலடிக்க தான் செய்தனர்.

பலத்த பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் ஹேமந்த்!!

இந்நிலையில் சுவாரசியம் குறைவாக இருந்தவர்களை நாமினேட் செய்துள்ளனர். அதில் அனைவரும் ஆரி, ஷிவானி, கேபி போன்றவர்களையே குறிப்பிட கடைசியாக ஷிவானியும், கேபியும் ஒய்வறைக்கு சென்றனர். ஏற்கனவே இருவருக்கும் ஒத்து போகாது.

இந்நிலையில் ஷிவானி இந்த தேர்வு தனக்கு சரியாக படவில்லை என சொல்லிவிட்டு தான் சென்றார். இந்நிலையில் பெஸ்ட்டாக விளையாடியது யார் என்று பார்த்ததில் அனைவரும் பாலாஜி, அர்ச்சனாவை சொல்கின்றனர். இந்த 2 ப்ரோமோக்களும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரத்தில் வெளியேறப்போவது யார் என்று பார்க்கையில் அனைவரும் அர்ச்சனா என்று தான் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here