மக்கள் நீண்டகாலமாக எப்பொழுது என்று எதிர்ப்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்குள் இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது எலிமினேஷன் போட்டியாளர்களின் பெயர் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4
பிக் பாஸ் ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே சக போட்டியாளர்களிடையே பல சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தனர். மேலும் இதுவரையிலும் ஆதரவு தெரிவித்து வந்த பலருக்கும் மக்கள் எதிராக நிற்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் டாஸ்கை கொடுத்து எலிமினேஷனில் இருக்கும் 8 நபர்களை அறிவித்திருந்தார். அந்த 8 நபரின் அஜித், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ரேகா, சம்யுக்தா, ஷிவானி மற்றும் கேப்ரில்லா என 7 பேர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்த லிஸ்டில் இருக்கும் நபர்களில் ஒருவர் தான் வீட்டை விட்டு வெளியேற போகிறவர்கள். இதனை மக்கள் தங்கள் ஓட்டின் மூலம் தேர்வு செய்வர். இப்பொழுது யாருக்கு ஒட்டுகள் குறைவாக உள்ளதோ அவர்களுக்கே இந்த ஞாயிற்று கிழமை வெளியேறுவர்.
இப்பொழுது பிக் பாஸில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது ரேகா, சம்யுக்தா மற்றும் சனம் ஷெட்டி தான் கடைசி இடத்தில் உள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே சனம் ஷெட்டிக்கு எதிராக ரசிகர்கள் பேசி வந்தனர். சம்யுக்தா அனைவரிடமும் பழகினாலும் மக்களிடையே அவருக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை.
எனவே இவர்கள் மூவரில் தான் யாரேனும் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. பலரும் சனம் ஷெட்டி வெளியேற போவதாக கூறி வருகின்றனர். ஆனால் ரேகா வெளியேற அதிகவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.