பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிஷா – முதுகில் குத்திய அர்ச்சனா கேங்!!

0

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் நடந்தது பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்றைய ப்ரோமோவில் கடைசியாக ஷிவானியும், நிஷாவும் இருக்கின்றனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரோபோ டாஸ்க் வந்ததில் இருந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதுவும் நிஷா அர்ச்சனாவை அழ வைக்க அவரது அப்பாவை பற்றி பேசியது பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. மேலும் நேற்றைய எபிசோடில் நிஷாவை கமல் வெளுத்து வாங்கி விட்டார் என்றே சொல்லலாம்.

யார் சுவாரசியம் குறைவாக இருந்தது என்று தேர்ந்தெடுத்ததில் பல குழப்பங்களும் ஏற்பட்டது. அனிதா தன் தரப்பு வாதத்தை தெளிவாகவே வைத்தார். நிஷாவுக்கு ஆரம்பத்தில் இருந்த ஆதரவுகள் அனைத்தும் குறைந்தும் போனது. ஏன் இப்படி விளையாடுகிறார் என்ற கேள்வி அனைவர்க்கும் இருக்க தான் செய்கிறது.

நிஷா முதல் வாரத்தில் ஒழுங்காக தான் விளையாடிக்கொண்டிருந்தனர். எப்பொழுது அர்ச்சனா வந்தாரோ அப்பொழுதே ரியோ, நிஷா தன் விளையாட்டை தொலைத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அர்ச்சனாவின் அன்பு கூட்டத்தில் நேற்று ரமேஷ் வெளியேறினார். இன்று நிஷா வெளியேறப்போவது உறுதியும் ஆகிவிட்டது.

இன்றைய ப்ரோமோவில் ஷிவானி, நிஷா இந்த இருவர் தான் கடைசியில் இருக்கின்றனர். யார் இருக்க வேண்டும் என்று கேட்கையில் ரியோ கூட ஷிவானியை தான் சொல்கிறார். பாலாஜி கேபி என அனைவரும் ஷிவானியை தான் சொல்கின்றனர். அனிதா மட்டும் தான் நிஷா இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கேட்டதும் நிஷாவிற்கு முகமே சோகமாகிறது. ஆரம்பகட்டத்தில் இருந்த நிஷா எங்கே என பலரும் தேடிக்கொண்டு தான் உள்ளனர். நிஷா தேவையில்லாமல் தன் பெயரையும் கெடுத்துக்கொண்டார். அவர் தான் இந்த வாரத்தில் வெளியேறப்போவது உறுதியாகி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here