பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல சண்டைகள் நடந்து வரும் நிலையில் பாவனி தன்னை அனைவரும் ஒதுக்கி வைப்பதாக பீல் செய்து இசைவாணியிடம் பேசிக் கொண்டு உள்ளார்.
பிக் பாஸ் 5
லாக்டவுனுக்கு பிறகு வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரம்ப காலகட்டத்திலேயே பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பொழுது இந்த வாரத்திற்கான எலிமினேசன் பிராசஸ் நடந்து கொண்டுள்ளது. இந்த வாரத்தில் பிரியங்கா அபிஷேக் மற்றும் இசைவாணி பலரும் லிஸ்ட்டில் உள்ளனர். இநிலையில் தான் தற்போது மூன்றாவது ப்ரோமோ வைரலாகி வருகிறது.
அதாவது பாவணி இசைவானியிடம் தன்னை அனைவரும் ஒதுக்குவதாக சொல்கிறார். தான் அந்த இடத்தில் உட்கார்ந்தால் பேச்சை மாற்றி விடுகின்றனர், தனக்கு கஷ்டமாக இருப்பதாக பாவணி சொல்ல அதற்கு அய்கி பெர்ரி வந்து அப்படி எல்லாம் இல்லை என்று சொல்கிறார். அதற்கு இசைவானி இதிலிருந்தே குரூப் இருபது தெரிகிறது என்று வம்புக்கு இழுக்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.