பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பிரியங்கா, நிரூப் ஒன்றாக அபிஷேக் உடன் இணைந்து ஹோட்டல் ஒன்றில் சந்தித்து தாங்கள் பெற்ற வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்:
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜு முதல் பரிசை தட்டி சென்றார். பிரியங்கா இரண்டாம் பரிசையும், பாவனி மூன்றாம் பரிசையும் பெற்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோர் சிறந்த நண்பர்களாக இருந்து வந்தனர். அபிஷேக் சில வாரங்களுக்கு முன்பாகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் அபிஷேக்கை சென்று சந்தித்துள்ளனர். மூவரும் ஹோட்டல் ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மூவரும் சந்தித்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை பக்கங்களில் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்