விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவும் புரியாத புதிராகவே கட்டப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சனாவும் அவரின் குரூப்பும் நிஷாவை பற்றி பேசிக்கொண்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல டாஸ்குகள் ஓடிக்கொண்டுள்ளது. அதாவது ஒன்றிலிருந்து 13 வரை வரிசைப்படுத்துவதற்கே பல பிரச்சனைகள் ஏற்பட்டது. சனம் ஷெட்டியை இரண்டாவது இடத்தில் நிற்க விடாமல் பல பிரச்னைகள் ஏற்பட்டது. மேலும் அர்ச்சனா வேறு முதல் இடத்திற்காக சண்டை போட்டார். எந்த தைரியத்தில் அப்படி செய்தார் என்று பலரும் கடுங்கோவதில் உள்ளனர். மேலும் அனிதா வேறு கோவித்துக்கொண்டு வர மாட்டேன் என்று அடம்பிடிக்கவும் செய்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எப்படியோ பல கலாட்டாக்களுக்கு பின் அனைவரும் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டனர். ஆனாலும் இந்த பிக் பாஸ் வரவர போர் அடிக்கிறது என்றே சொல்லலாம். அவர்கள் போடும் ப்ரோமோவும் மக்களுக்கு புரியாமலே இருக்கிறது. முதல் ப்ரோமோவில் அனிதா, ஆரி மற்றும் பாலா பேசுகின்றனர். அனிதா நேற்று நடந்த விஷயங்களுக்கு ஆரியிடம் சண்டையிடுகிறார்.
ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லையா??
எதற்காக சனம் ஷெட்டிக்கு சப்போர்ட் செய்தீர்கள் என்று கேட்டார். இதற்கு ஆரியால் பதில் சொல்லவும் முடியவில்லை. அடுத்ததாக ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அர்ச்சனா, சோம், ரியோ மற்றும் ரமேஷ் அமர்ந்துள்ளனர். ரமேஷ் எத்தனை தடவ சொன்னாலும் புரியாது, வீக் பாயிண்ட் இது தாணு தெரிஞ்சும் அப்டியே இருந்தா என்ன அர்த்தம் என்று கேட்க அதற்கு அர்ச்சனா இதுக்கு அப்புறம் 4 வருஷம் வரைக்கும் இந்த பேரு தான் நிலைக்கும் என்று சொல்கிறார்.
யாரை பற்றி பேசுகின்றனர் என்று பார்த்தால் நிஷாவையும், ஆரியையும் காட்டுகின்றனர். கூட இருந்துட்டே நிஷாவை பற்றி இப்படி பேசுகின்றனர் என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் நிஷா அம்மியில் வேறு அரைத்துக்கொண்டுள்ளார். பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக தெரிகிறது.