பிக் பாஸ் ஷோவில் பித்தலாட்டம் நடக்குது.., Favour பண்றாங்க.., உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

0
பிக் பாஸ் ஷோவில் பித்தலாட்டம் நடக்குது.., Favour பண்றாங்க.., உண்மையை உடைத்த பிரபல நடிகை!!
பிக் பாஸ் ஷோவில் பித்தலாட்டம் நடக்குது.., Favour பண்றாங்க.., உண்மையை உடைத்த பிரபல நடிகை!!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பொய்யான நிகழ்ச்சி, இதில் நிறைய பித்தலாட்டங்கள் நடக்கிறது என்று பிரபல நடிகையான அபிநயா ஸ்ரீ ஆவேசத்துடன் பேட்டி அளித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

மக்கள் மனதை கொள்ளை கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தமிழில், சீசன் 6 க்காக ரசிகர்கள் வைட்டிங்கில் உள்ளனர். மேலும் பிக் பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகிறது. இருப்பினும் தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 3 வாரங்கள் நிறைவு பெற்று விட்டது. அதில் ஒரு போட்டியாளராக, 2001 ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்” பட நடிகையும், அனுராதாவின் மகளுமான அபிநயஸ்ரீ கலந்துகொண்டிருந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் அவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற 2 வாரத்திலேயே, எலிமினேட் ஆகிவிட்டார். இந்நிலையில் வெளியில் வந்த அபிநயஸ்ரீ பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டவே இல்லை, மேலும் நாமினேஷன் லிஸ்டில் தன்னுடைய பெயர் இருந்தாலும், மக்கள் ஒட்டு போட்டு தன்னை காப்பாற்றி safe zone ல் தான் வைத்திருத்தாகவும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் போறேன் – சன் டிவி சீரியல் நடிகை போட்ட அதிரடி பதிவு! இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ?

மக்களின் ஓட்டு அடிப்படையில் தான் எலிமினேஷன் நடக்கிறது என்று சொல்வது பொய், சேனலுக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து கொண்டு, யாரை எலிமினேட் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும் என்று ஆத்திரத்துடன் கூறியுள்ளார். தமிழில் நடிகர் கமல்ஹாசன் எல்லா போட்டியாளர்களிடமும் பேசுகிறார். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை, வேண்டியவர்களிடம் மட்டுமே பேசுகிறார்கள் என அபிநயஸ்ரீ புகார் கூறியுள்ளார். இவர் கொடுத்த பேட்டியால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here