ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜி.பி.முத்து.., சொந்த தம்பியே செய்த வெறிச்செயல்!!

0
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜி.பி.முத்து.., சொந்த தம்பியே செய்த வெறிச்செயல்!!
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜி.பி.முத்து.., சொந்த தம்பியே செய்த வெறிச்செயல்!!

தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் ஜிபி முத்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜிபி முத்து:

சோசியல் மீடியாவின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஜிபி முத்து. சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வந்தார். அங்கும் தன்னுடைய வெகுளித்தனம் பேச்சால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் சிரிக்க வைத்தார். இவர் பிக்பாஸ் டைட்டிலை அடிப்பார் என்று ரசிகர்கள் எண்ணி வந்த நிலையில், அவர்களுக்கு வருத்தமளிக்கும் விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வாக் அவுட் செய்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார் என கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் நடித்த ஓ மை ஹோஸ்ட் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தலைவரை திரையில் பார்ப்பதற்கு அவருடைய ஆர்மி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜிபி முத்து பேசியது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் கதிரவனின் காதலி இவர் தானாம்.., இத்தனை நாளா மறைச்சிடீங்களே.., குமுறும் இளசுகள்!!

அதாவது அவர் கூறியதாவது, நானும் என் தம்பியும் ஒரு தடவை சண்டை போடும் போது பிளேடால் என்னை சரமாரியாக வெட்டினார். அப்போது நான் ரத்த வெள்ளத்தில் மிதந்தேன். அதன் பிறகு உறவினர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினார். எனக்கு மொத்தம் 175 தையல் போட்டாங்க என்று கூறினார். எனக்கு அப்ப இருந்த வலியை விட இப்போது தான் எனக்கு அதிகமாக இருக்கு. ஏனென்றால் என் தம்பி இப்ப உயிரோட இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here