பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. தற்போது கண்ணாடி போன்ற சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் லாஸ்லியா
இலங்கை பெண்ணான லாஸ்லியா முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இவரின் பல முயற்சிக்கு பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். பிக் பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சி என்று அன்போடும் அழைக்கப்பட்டார் லாஸ்லியா.
ஆரம்பத்தில் கவினுடன் நட்புடன் பழகி வந்த இருவரும் நாளடைவில் நெருக்கமாகி காதலிக்க ஆரம்பித்தனர். இதனால் பலரின் பேச்சுக்கு ஆளானார் லாஸ்லியா. ஆரம்பத்தில் இருந்த அனைத்து பெயரும் கேட்டு போனது. லாஸ்லியா ஆர்மி எங்கே போனது என்றே தெரியவில்லை.
70வது நாளில் லாஸ்லியா அப்பா வீட்டிற்கு வர பெரிய ரணகளமே வெடித்தது. அதன் பிறகு லாஸ்லியா தவறை சுட்டி காட்டி கவினிடமும் சமாதானம் பேசினார். இதனால் தான் லாஸ்லியா அப்பாவை அனைவர்க்கும் பிடித்து போனது.
வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு ஹர்பஜன் சிங் உடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். தற்போது போட்டோஷூட் நடத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் லேசான சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.