தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சரவணன். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தில் ஹீரோவுக்கு சித்தப்பாவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அப்போது இருந்து இப்பொழுது வரை அவரை சித்தப்பு என்று பாசத்தோடு அழைத்து வருகிறார்கள்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து மீண்டும் படத்தில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மனைவி அவர் மீது புகார் கொடுத்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, சரவணன் பருத்தி வீரன் படத்தில் நடிப்பதற்கு முன்னால், சாப்பிட கூட காசு இல்லாமல் பிச்சை எடுக்கும் அளவுக்கு இருந்தார். அப்போது அவருக்கு சாப்பாடு போட்டு நான் தான் அவரை நன்றாக பார்த்துக் கொண்டேன். மேலும் சிறுக சிறுக சேமித்து சென்னையில் ஒரு வீடு ஒன்றை கட்டினேன்.
தற்போது அந்த வீடு என்னுடையது என்று என்னை அடித்து விரட்ட பார்க்கிறார் சரவணன் என்று தனது கணவர் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் கொலை மிரட்டல் விடுவதாகவும், என் உயிர் போனால் அதற்கு அவர் தான் காரணம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.