என் காலுல 16 தையல் போட்ருக்காங்க.., என்னால நிக்கவே முடியாது.., அர்ச்சனா வெளியிட்ட உருக்கமான செய்தி!!

0
bigg boss

பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா தற்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் அவலநிலை பற்றி கூறியுள்ளார். இதனை கேட்ட பலரும் ஷாக்கில் உள்ளனர்.

அர்ச்சனா

பிரபல தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த அர்ச்சனா செல்லாத சேனல் கிடையாது. சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என அனைத்து சேனலுமே அவருக்கு பழக்கபட்ட இடம் தான். இதனால் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் தான் இவரது சுயரூபம் வெளியில் தெரிந்தது.

அன்பு என்ற பெயரில் யாரையுமே விளையாட விடாமல் செய்தார். மேலும் காமெடி என்ற பெயரில் அவர் செய்வதை பார்த்து மக்கள் முகம் சுளிக்க தான் செய்தனர். இதனால் வீட்டை விட்டும் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இன்ஸ்டா, யூடுப் என களைகட்டி வந்த அர்ச்சனாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

அதாவது அவர் மண்டை ஓட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி இருக்க தற்போது அர்ச்சனா தனது உடல் நிலை குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அர்ச்சனாவால் நீண்ட நேரம் நிற்க முடியாதாம்.

அவரது காலில் 16 தையல் போடப்பட்டுள்ளதாம். அவரது தங்கையும் மகளும் தான் அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறார்களாம். டிவி ஷோவிற்கு மீண்டும் வந்தால் 10 மணி நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை வரும் அதனால் தானால் இப்போதைக்கு வர முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here