ஜீ தமிழில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா தற்போது தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குணமானதும் ரசிகர்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
பிக் பாஸ் அர்ச்சனா
சன் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் அராம்பித்து தற்போது வரை பிரபல தொகுப்பாளினியாக வருபவர் தான் அர்ச்சனா. விஜய் டிவியில் இவர் ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
அதன் பிறகு தான் இவர் ஜீ தமிழுக்கு மாறினார். இந்நிலையில் தான் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் நகைச்சுவையாக இருந்தது எல்லாம் ஓரளவுக்கு நன்றாக தான் இருந்தது. ஆனால் நாளாக இவர் அன்பு என்ற பெயரில் செய்ததையெல்லாம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
அதுவும் நிஷா, ரியோ, சோம் போன்றவர்களை கையில் போட்டுகொண்டு அன்பு வெல்லும் என்று சுற்றி திரிந்தார். இந்நிலையில் தான் அவர் வீட்டை விட்டே வெளியேறினார். அதன் பிறகு அர்ச்சனாவை பலரும் கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால் அர்ச்சனா எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் தான் தற்போது அர்ச்சனா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் தான் அது. மண்டைஓட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
View this post on Instagram