தன் கணவரின் அந்த ஒரு வார்த்தைக்காக 5 வருடமாக காத்திருக்கும் அனிதா சம்பத் – கண்கலங்க வைத்த பதிவு!!

0

சன் டிவியில்  செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த அனிதா சம்பத் தற்போது தனது  திருமண நாள் அன்று தனது கணவருக்கு புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அனிதா சம்பத் 

தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கிய அனிதா சம்பத்  மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார். அதனால் தான்  அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ளும் வாய்ப்பு  கிடைத்தது. எந்த  அளவிற்கு  இவருக்கு  வரவேற்பு  இருந்ததோ அந்த அளவிற்கு  அவருக்கு வெறுப்பு தான்  உருவானது.

அனிதா  பேச  ஆரம்பித்தாலே  போதும் வீட்டில்  உள்ளவர்கள்  தெறித்து  ஓடி  விடுவார்கள். தான்  செய்வது தான்  சரி என்ற நோக்குடனேயே  அனைத்தையும்  செய்து வந்தார்.  யாரையுமே  பேச விடாமல் அவர்  செய்த  காரியம்  அனைத்துமே பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் தான் அவர் வீட்டை விட்டு வெளியியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

பிக் பாஸ்  வீட்டில்  இருந்த  வரையிலும்  அவர்  அதிகமாக  சொன்ன  வார்த்தை  என்னவென்றால்  அது அவரது  கணவர் பெயர் பிரபா தான். இருவரும்  காதலித்து  வந்த  கதை  முழுக்க  சொல்லிக்கொண்டே  இருந்தார். இதனிலேயே  அனிதா  புருஷன்  என்ற  ஹாஸ்டேக் வைரலாகி வருகிறது.

இந்நிலையில்  இன்று  அவருக்கு  இரண்டாவது  வருட  திருமண  நாள். அதற்கு  பலரும்  தங்களது  வாழ்த்துக்களை  தெரிவித்து  வருகின்றனர். மேலும் அவர்  ஒரு பதிவு ஒன்றை  வெளியீட்டுள்ளார். அதாவது தன்னை  இந்த  அளவுக்கு  பிரபலமாக்கி விட்டு ஒரு ஓரமாக  நின்று  கைதட்டும்  உனக்கு  அன்பை  தவிர  தருவதற்கு  வேறு  எதுவும்  இல்லை. I Love U என்ற  வார்த்தைக்காக 5 வருடமாக  காத்து  கொண்டுள்ளேன்  என்று  கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here