பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் நேரடியாக ஃபைனல் வாரத்திற்கு செல்ல Ticket to finale வில் போராடி வரும் நிலையில், அசீம் சக ஹவுஸ் மேட்ஸ் 2 பேரின் செயலுக்காக கொந்தளித்து உள்ளார்.
அசீம் கோபம் :
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 8 போட்டியாளர்கள், பைனலுக்கு நேரடியாக முன்னேற Ticket to finale டாஸ்கில் உயிரைக் கொடுத்து விளையாடுகின்றனர். வார இறுதியில் யார் அதிகப் போட்டியில் ஜெயிக்கிறார்களோ? அவரே நேரடியாக பைனலில் நுழையும் வாய்ப்பை பெறுவார் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் இன்று நடந்த டாஸ்க்கில், அசீம் திடீரென 2 நபர்கள் மேல் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது ஜோடியாக சேர்ந்து சைக்கிள் டாஸ்க் பண்ணும் போது, வேண்டுமென்றே தன்னை ஷிவின் மற்றும் ரக்ஷிதா பலி வாங்கி விட்டதாக குற்றம் சுமத்துகிறார்.
ஆனால் இதனை மறுத்த ஷிவின், இது எதேச்சையாக நடந்தது தேவையில்லாம பேசாதீங்க எனக் கூறுகிறார். ஆனால் வஞ்சம் வச்சு பழி வாங்கிய உங்க ரெண்டு பேரையும் வச்சு செய்யாம விடமாட்டேன் என, அசிம் ஆக்ரோஷத்தில் கத்துகிறார். இதனால் அவர்களுக்கிடையே உச்சகட்ட போட்டி நிலவும் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.