பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட, நிவாஷினி நேரலை ஒன்றில் தன் மனதில் இருக்கும் மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார்.
ஆதங்கப்பட்ட நிவாஷினி :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று நிவாஷினி பொதுமக்களால் வெளியேற்றப்பட்டார். இவர் வீட்டுக்குள் இருந்த போது, அசல் கோளாறுடன் மற்ற போட்டியாளர்களை விட அதிகம் நெருக்கம் காட்டினார். இதனால் இவரின், கான்சன்ட்ரேஷன் விளையாட்டில் குறைந்தது எனக் கூறி, சக ஹவுஸ் மேட்டுகளும் இவரை நாமினேட் செய்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் வெளியே வந்த நிவாஷினி, இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம், உங்களுக்கு வீட்டில் யாரை பிடிக்கும் என கேட்டபோது, குயின்சி என பதில் அளித்தார். தொடர்ந்து ஷிவின் அல்லது விக்ரமன் தான் டைட்டில் வின்னராக வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து, நான் சிலரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
அசீம் வாயை கொட்டிக் கொடுத்தாலும் நிப்பாட்ட முடியாது., இப்போ என்ன 7 1/2ய இழுத்திருக்காரு தெரியுமா?
அவர்கள் வீட்டில் இருந்தபோது ஒரு மாதிரியும், வெளியே வந்த பின் ஒரு மாதிரி நடந்து கொள்கிறார்கள். இப்போதான் எல்லாம் புரியுது, என குறிப்பிட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது, நிவாசினி அசல் கோளாறை தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.