பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2வது முறை வைக்கப்பட்ட பணப்பெட்டியை, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு போட்டியாளர் எடுத்துச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளியான தகவல்:
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 2 நாட்களில் இறுதி சுற்று நடக்க உள்ளது. தற்போது வரை 5 போட்டியாளர்கள் மிகத் தீவிரமாக, விளையாடி இறுதி கட்டத்தை எட்டி உள்ளனர். இந்த நிலையில் இதுவரை எந்த தமிழ் பிக் பாஸ் சீசனிலும் நடக்காத வகையில், 2வது முறையாக பணப்பெட்டி டாஸ்க் கொண்டுவரப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
முதல் பணப்பை டாஸ்க்கில் மூன்று லட்ச ரூபாயுடன் கதிர் வீட்டை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து, 2வது பணப்பெட்டி டாஸ்கில், யார் வெளியேறுவார்? என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில், ரூ.13 லட்சம் தொகையுடன் அமுதவாணன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியதாக தகவல் கிடைத்துள்ளது.
வாவ்., அசீமுக்கு இவ்ளோ பெரிய அங்கீகாரமா? 100 நாள் பயணத்தை ஒரே வரியில் சொன்ன பிக் பாஸ்!!
மிகச் சிறப்பாக விளையாடி, பிக் பாஸ் 6 ன் முதல் பைனலிஸ்டாக உள்ளே நுழைந்த அமுதவாணன், யாரும் எதிர்பாராத வகையில் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி,, இங்கு இருந்தாலும் தான் டைட்டில் ஜெயிக்க மாட்டேன் என்ற நம்பிக்கையில் தான், அவர் இப்படி செய்திருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.