பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறுவது அர்ச்சனா தான் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

விஜய டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வார இறுதிக்கு வந்துள்ளது. இந்த வாரத்தில் வெளியேறப் போவது யார்? என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக 70வது நாளை கடந்துள்ளது. இந்நிலையில் போன வாரம் யாரும் எதிர்பாராத விதமாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வராத வரைக்கும் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அவர் வந்த நாளில் இருந்து அவரது குரல் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டில் ஒலிக்கிறது. அன்பு அன்பு என்று கூறி ரியோ, நிஷா, சோம் போன்றவர்களை உட்கார வைத்து விட்டார். போன வாரம் கமல் அனைவரையும் வெளுத்து வாங்கி விட்டார்.

அன்பு குரூப் அடங்கி போனது என்றே சொல்லலாம். மேலும் நிஷா வெளியேறியது சற்று கவலையாக இருந்தாலும் அவர் இத்தனை நாட்கள் விளையாட தெரியாமல் இருந்தது நிஷாவா இது?? என்றிருந்தது. மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு ஆரம்பத்தில் செல்வாக்கு இருந்தாலும் அர்ச்சனாவால் அனைத்தும் பாழாகியது.

ஹேமந்த் நண்பர்கள் மீது சந்தேகிக்கும் அசிம்!!

ஆனால் நிஷாவை பிடிக்காமல் யாரும் வெளியேற்றவில்லை. நிஷா சரியாக விளையாடாமல் இருந்ததற்கு தான் வெளியேறினார். சில வாரங்களாக அர்ச்சனா தொடர்ந்து தப்பித்துக் கொண்டே தான் இருந்தார். ஆனால் இந்த வாரத்தில் கண்டிப்பாக தப்பிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் வோட் எண்ணிக்கையை அடிப்படையில் வைத்து பார்க்கும்போது அர்ச்சனா வெளியேறுவது உறுதி.

மேலும் ஒருவேளை சீக்ரட் ரூமிலும் வைக்க சான்ஸ் உள்ளது. அப்படி வைத்தால் கண்டிப்பாக ரசிகர்கள் கொந்தளிக்க தான் செய்வார்கள். இன்றைக்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனாவை மறுபடியும் வெளுத்து வாங்கியுள்ளார் கமல். அர்ச்சனாவை மட்டுமல்ல ரம்யாவையும் கூட.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here